4.6 KiB
4.6 KiB
ஆதாம்
உண்மைகள்:
தேவன் முதலாவது மனிதனாக ஆதாமை படைத்தார். ஆதாமும் அவனது மனைவியாகிய ஏவாளும் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டனர்.
- தேவன் ஆதாமை மண்ணினாலே உருவாக்கி அவன் நாசியிலே ஜீவ சுவாசத்தை ஊற்றினார்.
- ஆதாமின் பெயர் எபிரேய வார்த்தையில் “சிவப்பு மண்” அல்லது “நிலம்” என்ற வார்த்தைக்கு ஒப்பிடலாம்.
- ஆதாம் என்ற பெயர் பழைய ஏற்பாட்டு வார்தைகளாகிய “மனித இனம்” அல்லது “ மனிதன்” போன்றது.
- எல்லா மக்களும் ஆதாம் ஏவாளின் சந்ததிகள்
- ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு கீழ்ப்படியவில்லை. இக்காரியம் இவர்களை தேவனிடமிருந்து பிரித்ததுமின்றி மரணமும், பாவமும் உலகில் பிரவேசித்தது.
(மொழிப்பெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்
(மேலும் பார்க்க: மரணம், சந்ததி, ஏவாள், தேவ சாயல், வாழ்க்கை)
வேதாகமக் குறிப்புக்கள்:
வேதத்தின் கதைகளிலிருந்து உதாரணங்கள்
- 1:9 அதன் பின்பு கடவுள், “நாம் மனிதனை நம்முடைய சாயலாக நம்முடைய ரூபத்தில் உண்டாக்குவோம்.
- 1:10 அவனுடைய பெயர் ஆதாம். கடவுள் ஒரு அழகிய தோட்டத்தை உண்டு பண்ணி, அதை பண்படுத்தவும், பாதுகாக்கவும் ஆதாமை அங்கே வைத்தார்.
- 1:12 பின்பு கடவுள் “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல” என்று சொன்னார். ஆனால் எந்த ஒரு விலங்கும் ஆதாமுக்கு ஏற்றத் துணையாகக் காணப்படவில்லை.
- 2:11 அதன் பின்பு கடவுள் அவர்களுக்கு விலங்குகளின் தோலினால் ஆடை செய்து உடுத்துவித்தார்.
- 2:12 எனவே கடவுள் ஆதாமையும், ஏவாளையும் அந்த அழகியத் தோட்டத்தை விட்டு வெளியேற்றினார்.
- 49:8 ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த போது, அது அவர்களுடைய சந்ததிகள் முழுவதையும் பாதித்தது.
- 50:16 ஏனென்றால் ஆதாமும், ஏவாளும் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இந்த உலகத்திற்குப் பாவத்தைக் கொண்டு வந்தனர்.
சொல் தரவு:
- Strong's: H120, G76