ta_tw/bible/kt/israel.md

6.1 KiB

இஸ்ரேல், இஸ்ரவேலர்கள்

உண்மைகள்:

தேவன் "யாக்கோபுக்கு" இஸ்ரவேல் என்று பெயர் கொடுத்தார். அதாவது "அவர் தேவனுடன் போராடுகிறார்."என்று அர்த்தம்.

  • யாக்கோபின் சந்ததியினர் "இஸ்ரவேல் ஜனங்கள்" அல்லது "இஸ்ரவேல் தேசம்" அல்லது "இஸ்ரவேலர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
  • இஸ்ரவேல் ஜனங்களிடம் தேவன் தம் உடன்படிக்கை ஒன்றை உருவாக்கினார். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களே.
  • இஸ்ரவேல் தேசத்தில் பன்னிரண்டு கோத்திரங்களும் இருந்தன.
  • சாலொமோன் ராஜா மரித்துப்போன சீக்கிரத்தில், இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது: "யூதா"தெற்கு "ராஜ்யம்"என்றும், என்றும் இஸ்ரவேல் வடக்கு ராஜ்யம் என்றும் அழைக்கப்பட்டது.
  • பெரும்பாலும் "இஸ்ரவேல்" என்ற வார்த்தையை "இஸ்ரேல் மக்கள்" அல்லது "இஸ்ரவேல் தேசமாக" மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: யாக்கோபு, இஸ்ரேல் இராச்சியம், [யூதா, தேசம், இஸ்ரவேல் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 8:15 பன்னிரண்டு மகன்களின் வம்சாவழியினர் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களாக ஆனார்கள்.
  • 9:3 எகிப்தியர்கள் அநேக கட்டிடங்கள் மற்றும் முழு நகரங்களையும் கட்டியெழுப்புவதற்காக இஸ்ரவேலர்களை கட்டாயப்படுத்தினர்.
  • 9:5 ஒரு குறிப்பிட்ட இஸ்ரவேலிய பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
  • 10:1 அவர்கள், "என் மக்கள் போகட்டும் என்று இஸ்ரவேலின் தேவன் கூறுகிறார் என்று சொன்னார்கள்.!
  • 14:12 ஆனால் இவை அனைத்திலும் இருந்தாலும், இஸ்ரவேல் மக்கள், தேவனுக்கு எதிராகவும் மோசேக்கு எதிராகவும் முறுமுறுத்தனர்.
  • 15:9 தேவன் அந்த நாள் இஸ்ரவேலு க்காக போராடினார். அவர் எமோரியர்களை குழப்பமடையச் செய்தார். எமோரியரில் அநேகரைக் கொன்ற பெரிய கல்மழையை அவர் அனுப்பினார்.
  • 15:12 இந்த யுத்தத்திற்குப் பிறகு, இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் சொந்தப் பகுதிக்கு தேவன்கொடுத்தார். பின்னர் தேவன் இஸ்ரவேலுக்கு சமாதானத்தை அதன் எல்லையோரங்களுக்கு கொடுத்தார்.
  • 16:16 எனவே தேவன் சிலைகளை வணங்குவதற்காக மீண்டும் இஸ்ரவேலைத் தண்டித்தார்.
  • 43:6 "இஸ்ரவேலின் மனிதர்களே, இயேசுவே பல வல்லமையால் பல அற்புதமான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தவர்.

சொல் தரவு:

  • Strong's: H3478, H3479, H3481, H3482, G935, G2474, G2475