5.9 KiB
5.9 KiB
யூதா, யூதாவின் ராஜ்யம்
உண்மைகள்:
இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் யூதா கோத்திரத்தினர் மிகப் பெரியவர். யூதா ராஜ்யம் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கொண்டிருந்தது.
- சாலொமோன் ராஜா மரித்துப்போன பிறகு, இஸ்ரவேல் தேசம் இரண்டு ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது: இஸ்ரேல் மற்றும் யூதா. யூதா ராஜ்யம் தெற்கு இராச்சியம், உப்புக் கடலுக்கு மேற்கே அமைந்துள்ளது.
- யூதா ராஜ்யத்தின் தலைநகரம் எருசலேம்.
- யூதாவின் எட்டு ராஜாக்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து மக்களை வழிபட வழிநடத்தியது. யூதாவின் மற்ற அரசர்கள் தீயவர்கள், மக்கள் சிலைகளை வணங்க வழிநடத்தினார்கள்.
- அசீரியா இஸ்ரவேலை (வடக்கு ராஜ்யம்) தோற்கடித்த 120 வருடங்களுக்குப் பிறகு, யூதா பாபிலோன் தேசத்தால் கைப்பற்றப்பட்டது. பாபிலோனியர்கள் அந்த நகரத்தையும் ஆலயத்தையும் அழித்து, யூதாவின் பெரும்பகுதியை பாபிலோனுக்கு சிறைபிடித்துச் சென்றார்கள்.
(மேலும் காண்க: யூதா, உப்பு கடல்)
வேதாகமக் குறிப்புகள்:
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 18:7 இரண்டு கோத்திரங்கள் மட்டுமே அவருக்கு (ரெகொபெயாம்) விசுவாசமாக இருந்தனர் இந்த இரு கோத்திரங்களும் யூதாவின் __ இராஜ்ஜியம் ஆனார்கள் __.
- 18:10 யூதா இராஜ்ஜியம்__ மற்றும் இஸ்ரவேலும் எதிரிகளாக மாறி, அடிக்கடி ஒருவருக்கொருவர் எதிராகவும் போராடினார்கள்.
- 18:13 யூதாவின் _இராஜாக்கள்__தாவீதின் வம்சாவழியினர். இந்த அரசர்களில் சிலர் நீதிமான்களாகவும் தேவனை வணங்கினவர்களாகவும் இருந்த நல்ல மனிதர்கள். ஆனால் __யூதாவின்வின் அரசர்கள் பெரும்பான்மையினர் பொல்லாதவர்களாக இருந்தனர், ஊழல் செய்தார்கள், அவர்கள் சிலைகளை வணங்கினர்.
- 20:1 இஸ்ரேல் மற்றும் யூதாவின் __இராஜ்ஜியங்கள் தேவனுக்கு எதிராக பாவம்.செய்தார்கள்.
- 20:5 யூதாவின் ஸ்தானத்தில் உள்ள மக்கள், இஸ்ரவேல் மக்களை விசுவாசித்து, கீழ்ப்படியாததற்காக, தேவன் எவ்வாறு தண்டித்தார் என்பதைக் கண்டார்கள். ஆனாலும் அவர்கள் கானானியருடைய தேவர்களையும் விக்கிரகங்களையும் வணங்கினார்கள்.
- __20:6__அசீரியர்கள் இஸ்ரவேலின் ராஜ்யத்தை அழித்த சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் பாபிலோனிய மன்னனான நேபுகாத்நேச்சாரிடம் யூதாவின் __ இராஜ்ஜியத்தைத் தாக்குவதற்காக அனுப்பினார்.
- __20:9__நேபுகாத்நேச்சாரும் அவரது படைகளும் யூதாவின் ராஜ்யத்தைச் சுற்றிலும் கிட்டத்தட்ட எல்லா மக்களையும் எடுத்துக் கொண்டனர்.
சொல் தரவு:
- Strong's: H4438, H3063