3.8 KiB
3.8 KiB
ஓநாய், ஓநாய்கள், காட்டு நாய்கள்
விளக்கங்கள்
ஓநாய் என்பது மூர்க்கமானதும், காட்டு நாயைப்போலவே தோற்றம் கொண்ட மாமிசம் உண்ணும் விலங்காகும்.
- ஓநாய்கள் பொதுவாக கூட்டமாக வேட்டையாடுகின்றன. மேலும் அதன் இரையை புத்திசாலித்தனமாகவும், சந்தடி செய்யாமல் நிதானமாக குறிவைத்துப் பிடிக்கின்றன.
- வேதாகமத்தில், “ஓநாய்கள்” என்ற பதம், ஆடுகளுக்கு ஒப்பிட்டுச் சொல்லப்படுகின்ற விசுவாசிகளை அழிக்கின்ற கள்ளப் போதகர்கள் அல்லது கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறிப்பிடுவதற்காக உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. தவறான போதனைகள், மக்களை அவர்களுக்கே தீங்கு விளைவிக்கும் தவறான காரியங்களை நம்பச்செய்கிறது.
- ஆடுகள் ஓநாய்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. ஏனென்றால் அவைகள் பலவீனமானவைகளும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன என்ற உண்மையின் அடிப்படையில் இந்த ஒப்பீடு உள்ளது.
மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:
- இந்தப்பதம் “காட்டு நாய்” அல்லது காட்டு விலங்கு” என்றும் மொழிபெயர்க்கப்படமுடியும்.
- காட்டு நாய்களுக்கு “நரி” அல்லது “கொயோடே (ஓநாயின் ஒரு வகை)” என்னும் மற்ற பெயர்களும் உண்டு.
- மக்களைக் குறிக்க உருவகமாக பயன்படுத்தினால் “ஆடுகளைத் தாக்குகிற விலங்குகளைப்போல் மக்களைத் துன்புறுத்தும் தீய மனிதர்கள்” என்று மொழிபெயர்க்கலாம்.
(மேலும் பார்க்க: தீமை, கள்ளத் தீர்க்கதரிசி, ஆடு, கற்பி)
வேதாகமக் குறிப்புகள்:
- அப்போஸ்தல நடபடிகள் 20:28-30
- ஏசாயா 11:6-7
- யோவான் 10:11-13
- லூக்கா 10:3-4
- மத்தேயு 7:15-17
- செப்பனியா 3:3-4
சொல் தரவு:
- Strong's: H2061, H3611, G3074