7.4 KiB
7.4 KiB
எருசலேம்
உண்மைகள்:
எருசலேம் ஆரம்பத்தில் ஒரு பண்டைய கானானிய நகரமாக இருந்தது, அது பின்னர் இஸ்ரவேலில் மிக முக்கியமான நகரமாக ஆனது. இது உப்புக் கடலுக்கு மேற்கே 34 கிலோமீட்டர் தூரத்திலும் பெத்லகேமுக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. இது இன்றும் இஸ்ரேலின் தலைநகரமாக உள்ளது.
- "எருசலேம்" என்ற பெயர் முதலில் யோசுவாவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் மற்ற பழைய ஏற்பாட்டு பெயர்களில் "ஷாலோம்" "எபூசிய நகரம்", "சீயோன்" ஆகியவை அடங்கும். "எருசலேம்" மற்றும் "சாலோம்" என்ற இரண்டும் "சமாதானம்" என்ற மூல அர்த்தம் உள்ளது.
- எருசலேம் முதலில் "சீயோன்" என அழைக்கப்படும் எபூசியஸ் அரண்மனையாக இருந்தது.
- எருசலேமில் இருந்த தாவீதின் மகன் சாலொமோன் எருசலேமில் உள்ள முதல் ஆலயத்தைக் கட்டினார், ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கை பலியிடச் சென்ற மோரியா மலையாக இருந்தது. பாபிலோனியரால் அழிக்கப்பட்ட பிறகு அந்த ஆலயம் மறுபடியும் கட்டப்பட்டது.
- ஆலயம் எருசலேமிலிருந்ததால், முக்கியமான யூத பண்டிகைகள் அங்கே கொண்டாடப்பட்டன.
- பொதுவாக எருசலேமுக்குச் செல்வது "மலைகள்" என்று மலைப்பகுதிகளில் இருந்தது.
மேலும் காண்க: பாபிலோன்](../names/babylon.md), கிறிஸ்து, தாவீது, எபூசியர், இயேசு, சாலொமோன், தேவாலயம், சீயோன்)
வேதாகமக் குறிப்புகள்:
- கலாத்தியர் 4:26-27
- யோவான் 2:13-14
- லூக்கா 4:9-11
- லூக்கா 13:4-5
- மாற்கு 3:7-8
- மாற்கு 3:20-22
- மத்தேயு 3:4-6
- மத்தேயு 4:23-25
- மத்தேயு 20:17-19
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 17:5 தாவீது __எருசலேமைக் கைப்பற்றி, அதை தலைநகரமாக மாற்றியிருந்தார்.
- 18:2 எருசலேமில், சாலொமோன் தனது தகப்பனாகிய தாவீது திட்டமிட்டு சேகரித்த பொருள்களைக் கொண்டு கட்டினார்.
- 20:7 அவர்கள் (பாபிலோனியர்கள்)_____ எருசலேம் பட்டணத்தை கைப்பற்றினர், ஆலயத்தை அழித்து, நகரத்தின் எல்லாப் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டனர்.
- 20:12 எனவே, எழுபது ஆண்டுகள் சிறையிருப்பில் இருந்தபின், ஒரு சிறிய குழு யூதர்கள் யூதாவிலுள்ள _____ எருசலேம்_ நகரத்திற்குத் திரும்பிப் போனார்கள்.
- 38:1 இயேசு முதன்முதலாக பிரசங்கிக்க ஆரம்பித்து மூன்று வருடங்களுக்குப் பிறகு, தம்முடைய சீஷர்களிடம் இயேசு, இந்த பஸ்காவை அவர்களோடு பஸ்கா பண்டிகையை எருசலேமில் கொண்டாட விரும்பினார் என்றும், அங்கு அவர் கொல்லப்படுவார் என்றும் கூறினார்.
- 38:2 இயேசுவும் சீஷரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்த பிறகு, யூதாஸ் யூதத் தலைவர்களிடம் சென்று பணத்திற்கு ஈடாக இயேசுவைக் காட்டிக்கொடுத்தார்.
- 42:8 "தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுவதற்காக ஒவ்வொருவரும் மனந்திரும்ப வேண்டுமென என் சீடர்கள் அறிவிப்பார்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் __ எருசலேமில் ஆரம்பிக்கிறார்கள், பின்னர் எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் செல்லுங்கள். "
- 42:11 இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு தம்முடைய சீஷர்களிடம், "எருசலேமில் தங்கியிருந்து பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வந்து சேரும்போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள்" என்று இயேசு கூறினார்.
சொல் தரவு:
- Strong's: H3389, H3390, G2414, G2415, G2419