3.3 KiB
3.3 KiB
கன்னிபெண், கன்னிகைகள், கன்னித்தன்மை
விளக்கம்:
கன்னிகை என்பவள் யாருடனும் உடலுறவு கொண்டிராத பெண் ஆவாள்.
- மேசியா, கன்னிகையிடம் பிறப்பார் என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா கூறினார்.
- மரியாள் இயேசுவைக் கர்ப்பந்தரிக்கும்போது, அவள் கன்னிப்பெண்ணாக இருந்தாள். அவருக்கு மனிதனாகிய தகப்பன் இல்லை.
- சில மொழிகளில் மென்மையான முறையில் கன்னிப்பெண்ணைக் குறிப்பிடும் வார்த்தை இருக்கலாம். (பார்க்கவும்: தகுதிச் சொல்வழக்கு
(மேலும் பார்க்க: கிறிஸ்து, ஏசாயா, இயேசு, மரியாள்)
வேதாகமக் குறிப்புகள்:
வேத கதைகளிலிருந்து உதாரணங்கள்:
- 21:9 தீர்க்கதரிசியாகிய ஏசாயா, மேசியா ஒரு கன்னிப்பெண்ணிடம் பிறப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.
- 22:4 அவள் (மரியாள்) கன்னிப்பெண்ணாக இருந்தாள். மேலும் அவள் யோசேப்பு என்னும் மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள்.
- 22:5 இது எப்படியாகும்¸நான் கன்னிப்பெண்ணாயிருக்கிறேனே? என்று மரியாள் மறுமொழி கொடுத்தாள்.
- 49:1 கன்னிப்பெண்ணாகிய மரியாள் தேவக் குமாரனைப் பெற்றெடுப்பாள் என்று தேவதூதன் கூறினான். ஆகவே அவள் கன்னிப்பெண்ணாக இருக்கும்போது, ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டாள்.
சொல் தரவு:
- Strong's: H1330, H1331, H5959, G3932, G3933