4.1 KiB
4.1 KiB
நாசரேத், நாசரேயன்
உண்மைகள்:
வடக்கு இஸ்ரவேலில் கலிலேயாவின் ஊராகும் நாசரேத். இது எருசலேமின் வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, அது பாதையில் பயணிக்க மூன்று முதல் ஐந்து நாட்களை எடுத்தது.
- யோசேப்பும் மரியாளும் நாசரேத்திலிருந்து வந்தார்கள்; அவர்கள் அங்கே இயேசுவை வளர்த்தார்கள். அதனால்தான் இயேசு "நசரேயன்" என்று அழைக்கப்பட்டார்.
- நாசரேத்திலிருந்த யூதர்களில் அநேகர் இயேசுவின் போதனைகளை மதிக்கவில்லை; ஏனெனில் அவர் ஒரு சாதாரண மனிதர் என்று அவர்கள் நினைத்தார்கள்.
- ஒருமுறை, நாசரேத்திலுள்ள ஜெப ஆலயத்தில் இயேசு கற்பித்தபோது, யூதர்கள் அவரைக் கொல்ல முயன்றார்கள், ஏனெனில் அவர் மேசியாவாக இருப்பதாகக் கூறி, அவரை நிராகரிப்பதற்காக அவர்களைக் கடிந்து கொண்டார்.
- நாசரேத்திலிருந்து இயேசு வந்ததை கேள்விப்பட்டபோது நாத்தான்வேல் சொன்னார், இந்த நகரம் மிக சிறந்ததாக கருதப்படவில்லை என்று சுட்டிக்காட்டியது.
(மேலும் காண்க: கிறிஸ்து, கலிலேயா, யோசேப்பு, மரியாள்)
வேதாகமக் குறிப்புகள்:
- அப்போஸ்தலர் 26:9-11
- யோவான் 1:43-45
- லூக்கா 1:26-29
- மாற்கு 16:5-7
- மத்தேயு 2:22-23
- மத்தேயு 21:9-11
- மத்தேயு 26:71-72
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 23:4 யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு வசித்த இடமாகிய _நாசரேத்திலிருந்து _ ஒரு நீண்ட பயணத்தைச் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில் அவர்களது மூதாதையர் தாவீது ஆவார்.
- __26:2__இயேசு தனது குழந்தை பருவத்தில் வாழ்ந்த __நாசரேத் நகரத்திற்குச் சென்றார்.
- 26:7 __ நாசரேத்தின் மக்கள் இயேசுவை ஜெபாலயத்திலிருந்து வெளியே இழுத்து வந்து அவரைக் கொன்றுவிடுவதற்காக அவரைக்செங்குத்தான ஒரு குன்றின் விளிம்பில் கொண்டு வந்தனர்.
சொல் தரவு:
- Strong's: G3478, G3479, G3480