4.1 KiB
4.1 KiB
கலிலேயா, கலிலேயன், கலிலேயர்கள்
உண்மைகள்:
சமாரியாவின் வடக்கே இஸ்ரவேலின் வடக்குப் பகுதி கலிலேயா இருந்தது. ஒரு கலிலேயன் கலிலேயாவில் வாழ்ந்த அல்லது கலிலேயாவில் வாழ்ந்த ஒரு நபர்.
- கலிலேயா, சமாரியா மற்றும் யூதேயா ஆகியவை புதிய ஏற்பாட்டின்கீழ் இஸ்ரவேலின் மூன்று பிரதான மாகாணங்களாக இருந்தன.
- கலிலேயா கடலோரமாக "கலிலேயாக் கடல்" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய ஏரி கிழக்கே உள்ளது.
- கலிலேயாவிலிருந்த நாசரேத்தில்தான் இயேசு வளர்ந்தார்,வாழ்ந்தார்.
- இயேசுவின் அற்புதங்கள் மற்றும் போதனைகள் கலிலேயா பகுதியில் நிகழ்ந்தன.
(மேலும் காண்க: நாசரேத், சமாரியா, கலிலேயாக் கடல்)
வேதாகமக் குறிப்புகள்:
- அப்போஸ்தலர் 9:31-32
- அப்போஸ்தலர் 13:30-31
- யோவான் 2:1-2
- யோவான் 4:1-3
- லூக்கா 13:1-3
- மாற்கு 3:7-8
- மத்தேயு 2:22-23
- மத்தேயு 3:13-15
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 21:10 ஏசாயா தீர்க்கதரிசி, மேசியா கலிலேயாவில் வசிப்பார், உடைந்த இருதயங்களைத் தேற்றி, சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையைக் கூறி, கட்டப்பவர்களை விடுதலையாக்குவார் என்று கூறினார்.
- 26:1 சாத்தானின் சோதனையை கடந்து பிறகு, இயேசுதான் வாழ்ந்த இடமாகிய கலிலேயா என்ற இடத்திற்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன், திரும்பினார்.
- 39:6 இறுதியாக, மக்கள், "நீங்கள் இருவரும் கலிலேயாவில் பிறந்தீர்கள் என்றும் நீங்கள் இயேசுவுடன் இருந்தீர்கள் என்றும் எங்களுக்குத் தெரியும்." என்று சொன்னார்கள்.
- 41:6 அப்பொழுது தேவதூதர்கள் பெண்களிடம், "நீங்கள் போய், சீடர்களிடம், இயேசு மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார்,உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்கு வருவார்" என்றார். "
சொல் தரவு:
- Strong's: H1551, G1056, G1057