3.7 KiB
3.7 KiB
சகரியா (புதிய ஏற்பாடு)
உண்மைகள்:
புதிய ஏற்பாட்டில், யோவான் ஸ்நானகனுக்கு தகப்பனாகிய சகரியா யூத ஆசாரியனாக இருந்தான்.
- சகரியா தேவனை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்தான்.
- சகரியாவும் அவனுடைய மனைவியாகிய எலிசபெத்தும் அநேக வருடங்களாக ஒரு குழந்தையைப் பெறுவதற்காக ஊக்கமாக ஜெபித்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு குழந்தைகூட இல்லை. பின்புஅவர்கள் வயதானபோது, தேவன் அவர்களுடைய ஜெபத்திற்குப் பதில்கொடுத்து, அவர்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தார்.
- சகரியா, தன் மகனாகிய யோவான், மேசியாவிற்கு வழியை ஆயத்தப்படுத்தி, அறிவிக்கிற தீர்க்கதரிசியாக இருப்பான் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான்.
(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்ப்பது
(மேலும் பார்க்க: கிறிஸ்து, எலிசபெத், தீர்க்கதரிசி
வேதாகமக் குறிப்புக்கள்:
வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:
- 22:1 திடீரென்று தேவனிடத்திலிருந்து ஒரு தேவதூதன் ஒரு செய்தியுடன், சகரியா என்னும் பெயர்கொண்ட வயதான ஆசாரியனிடம் வந்தான். சகரியாவும் அவனுடைய மனைவியாகிய எலிசபெத்தும் தேவபக்தியுள்ளவர்களாக இருந்தனர். ஆனால் அவள் குழந்தைகளைப் பெற்றெடுக்க இயலாதவளாக இருந்தாள்.
- 22:2 தேவதூதன் சகரியாவிடம், “உன் மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள்” என்று கூறினான். அவனுக்கு யோவான் என்று பெயரிடு”
- 22:3 உடனடியாக, சகரியாவால் பேசமுடியவில்லை.
- 22:7 பின்பு தேவன், சகரியா மறுபடியும் பேசுவதற்கு அனுமதித்தார்.
சொல் தரவு:
- Strong's: G2197