5.4 KiB
5.4 KiB
ஆபிரகாம், ஆபிராம்
உண்மைகள்:
ஊர் தேசத்தின் கல்தேயஆபிரகாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் முற்பிதாவாகிய அவனுடைய பெயரை “ஆபிரகாம்” என்று தேவன் மாற்றினர்
- “ஆபிராம்” என்ற பெயருக்கு “கனப்படுத்தப்பட்ட தகப்பன்” என்று அர்த்தம்.
- “ஆபிரகாம்” என்றால் “சந்ததிகளுக்கு தந்தை” என்று அர்த்தம்
- ஆபிரகாம் பல சந்ததிகளைப் பெற்று, பெரிய தேசமாவான் என்று தேவன் வாக்கருளினார்.
- ஆபிரகாம் தேவனை விசுவாசித்து அவருக்கு கீழ்படிந்தான். தேவன் ஆபிரகாமை கல்தேய தேசத்திலிருந்து கானானுக்குள் செல்ல வழிநடத்தினார்.
- ஆபிரகாமும் அவனது மனைவி சாராளும், தங்களது வயது முதிர்ந்த காலத்தில் கானானில் வசித்தபோது ஈசாக்கு என்ற மகனை பெற்றார்கள்.
(மொழிபெயர்ப்பு யோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது
(மேலும் பார்க்க: கானான், கல்தியா, சாராள், ஈசாக்)
வேத விளக்கங்கள்:
- கலாத்தியர் 3:6-9
- ஆதியாகமம் 11:29-30
- ஆதியாகமம் 21:1-4
- ஆதியாகமம் 22:1-3
- யாக்கோபு 2:21-24
- மத்தேயு 1:1-3
வேதாகம கதைகளிலிருந்து உதாரணங்கள்:
- 4:6 ஆபிராம் கானானை அடைந்தவுடன், “உன்னை சுற்றிப் எல்லாவற்றையும் பார்” என்று தேவன் கூறினார். நீ காணும் எல்லா நிலங்களையும் உனக்கும் உன் சந்ததிக்கும் பரம்பரைசொத்தாக தருவேன்.
- 5:4 ஆபிராம் என்ற அவனுடைய பெயரை “ஆபிரகாம்” என்று தேவன் மாற்றினர் அதற்கு “சந்ததிகளுக்கு தந்தை” என்று அர்த்தம்.
- 5:5 ஒரு வருடத்திற்கு பின்பு, ஆபிரகாமுக்கு நூறு வயதும், சாராளுக்கு தொன்னுறு வயதாகும் போது, சாராள் ஆபிரகாமுக்கு ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள்.
- 5:6 ஈசாக்கு வாலிப வயதுஉடையவனாக இருக்கும்போது, தேவன் ஆபிரகாமுடைய விசுவாசத்தை சோதிக்கும்படியாக, “உன்னுடைய ஒரே பேறான குமாரனை, கொன்று எனக்கு பலியிடு” என்றார்.
- 6:1 ஆபிரகாம் வயது முதிர்ந்தவனானபோது, ஈசாக்கு திருமண வயதை எட்டிய போது, ஆபிரகாம் தனது வேலைக்காரர்களை அவனது முறையார்களிடத்தில் அனுப்பி ஈசாக்குக்கு ஒரு பெண்ணை தேடினான்.
- 6:4 பலகாலம் சென்ற பின்பு, ஆபிரகாம் மரித்தான், அவனுக்கு தேவன் பண்ணின எல்லா உடன்படிக்கைகளும் அவனது குமாரனாகிய ஈசாக்குக்கு அருளப்பட்டது.
- 21:2 ஆபிரகாம் மூலம் உலகின் சகல ஜனங்களும் ஆசிர்வாதம் பெறுவார்கள் என்று தேவன் வாக்குரைத்தார்.
சொல் தரவு:
- Strong's: H87, H85, G11