3.6 KiB
3.6 KiB
பலிபீடம், பலிபீடங்கள்
விளக்கம்:
பலிபீடம் என்பது ஒரு எழுப்பப்பட்ட பீடம் அதில் இஸ்ரவேலர்கள் அவர்களின் தேவனுக்கு மிருகங்களையும் மற்றும் தானியங்களையும் பலியிடுவார்கள்.
- வேதத்தின் காலத்தில், எளிமையான பலிபீடங்கள் மண்ணை குவித்து ஏற்படுத்துவது அல்லது கல் குவியல்களை கவனமாக சேர்த்துவைத்து ஏற்படுத்துவதாகும்.
- விசேஷித்த பெட்டி போன்ற வடிவத்தில் மரத்தினால் செய்து அதை தங்கம், பித்தளை அல்லது வெண்கலம் போன்ற உலோகத்தின் தகட்டினால் மூடுவார்கள்.
- இஸ்ரவேல் தேசத்தை சுற்றி வாழ்ந்த ஜனங்களும் பலி பீடங்களை கட்டி அவர்களின் தெய்வங்களுக்கு பலியிட்டார்கள்.
(மேலும் பார்க்க: தூபபீடம், அந்நியகடவுள், தானிய காணிக்கைகள், பலி
வேத குறிப்புகள்:
- ஆதியாகமம் 8:20-22
- ஆதியாகமம் 22:9-10
- யாக்கோபு 2:21-24
- லூக்கா 11:49-51
- மத்தேயு 5:23-24
- மத்தேயு 23:18-19
வேத கதைகளிலிருந்து உதாரணங்கள்:
- 3:14 நோவா கப்பலை விட்டு வெளியே வந்தவுடன், ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலி செலுத்தக் கூடிய சுத்தமான விலங்குகள் எல்லா வகையிலிருந்தும் சிலவற்றை கடவுளுக்காக பலியிட்டான்.
- 5:8 அவர்கள் பலிசெலுத்தும் இடம் வந்ததும், ஆபிரகாம் ஈசாக்கைக் கட்டி பலிபீடத்தின் மேல் வைத்தான். பின்பு அவனை வெட்ட கத்தியை எடுத்தான்.
- 13:9 ஆசாரியன் அதைக்கொன்று பலிபீடத்தில் எரிப்பான்
- 16:6 கிதியோனின் தகப்பனார், ஒரு சிலைக்கு பலிபீடம் கட்டியிருந்தார். கடவுள் கிதியோனிடம் அதை இடித்துப் போடச் சொன்னார்.
சொல் தரவு:
- Strong's: H741, H2025, H4056, H4196, G1041, G2379