ta_tw/bible/names/baal.md

38 lines
5.7 KiB
Markdown

# பாகால்
## உண்மைகள்:
"பாகால்" என்பது "ஆண்டவர்" அல்லது "எஜமான்" என்று பொருள்படும், கானானியரால் வணங்கப்பட்ட முதன்மையான பொய்யான கடவுளின் பெயர் ஆகும்.
* "பாகால் என்னும் பெயரை தங்களின் பெயர்களோடு இணைத்துக்கொண்ட, உதாரணமாக “பாகால் பேயோர்” என்பது போன்ற உள்ளூர் பொய் தெய்வங்களும் இருந்தன. சில நேரங்களில் இந்த தெய்வங்கள் அனைத்தும் "பாகால்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன.
* சிலர் தங்கள் பெயர்களுடன் "பாகால்" என்ற வார்த்தையை உள்ளடக்கிய பெயரைக் கொண்டிருந்தனர்.
பிள்ளைகளை பலியிடுவது வேசிகளைப் பயன்படுத்துவது, போன்ற தீய பழக்கங்களை பாகால் வழிபாடு உள்ளடக்கியது.
* தங்கள் வரலாற்றின் வெவ்வேறு காலங்களில் இஸ்ரவேலர் பாகால் வணக்கத்தில் ஆழமாக ஈடுபடுத்தப்பட்டார்கள், அவர்களைச் சுற்றியிருந்த புறஜாதி தேசங்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள்.
* ஆகாபின் அரசாட்சியின் போது, ​​பாகால் இல்லை என்றும் யெகோவாவே உண்மையான ஒரே தேவன் மக்களுக்கு நிரூபிக்க தேவனுடைய தீர்க்கதரிசியாகிய எலியா மக்களுக்கு ஒரு பரீட்சையை வைத்தார்.. இதன் விளைவாக, பாகால் தீர்க்கதரிசிகள் அழிக்கப்பட்டு மக்கள் மீண்டும் கர்த்தரை வணங்கினர்.
(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: [பெயர்களை மொழிபெயர்ப்பது எப்படி](rc://ta/ta/man/translate/translate-names)
(மேலும் பார்க்கவும்: [ஆகாப்](../names/ahab.md), [அஸ்தரோத்](../names/asherim.md), [எலியா](../names/elijah.md), [பொய்யான தெய்வம்](../kt/falsegod.md), [வேசி](../other/prostitute.md), [யாவே](../kt/yahweh.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [1 இராஜாக்கள் 16:31-33](rc://ta/tn/help/1ki/16/31)
* [1 சாமுவேல் 7:3-4](rc://ta/tn/help/1sa/07/03)
* [எரேமியா 2:7-8](rc://ta/tn/help/jer/02/07)
* [நியாதிபதிகள் 2:11-13](rc://ta/tn/help/jdg/02/11)
* [எண்ணாகமம் 22:41](rc://ta/tn/help/num/22/41)
## வேதாகமக் கதைகளிலிருந்து உதாரணங்கள்:
* __[19:2](rc://ta/tn/help/obs/19/02)__ ஆகாப் ஒரு தீய மனிதன், மக்கள் __பாகால்__ என்ற பெயர்கொண்ட ஒரு பொய்யான தெய்வத்திற்கு வழிபாடு செய்ய ஊக்குவித்தார்.
* __[19:6](rc://ta/tn/help/obs/19/06)__ இஸ்ரவேலின் அனைத்து மக்களும், மற்றும் __பாகாலின்__450 தீர்க்கதரிசிகளும் கர்மேல் மலைக்கு வந்தனர்.. எலியா மக்களை நோக்கி: எதுவரைக்கும் உன் மனதை மாற்றிக்கொள்வாய்? கர்த்தர் தேவனாக இருந்தால், அவரை சேவியுங்கள்! __பாகால்__ தெய்வமானால், அவனை சேவியுங்கள்! "
* __[19:7](rc://ta/tn/help/obs/19/07)__ பின்னர் எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி, "ஒரு காளையைக் கொன்று, அதை பலியாக செலுத்துங்கள். ஆனால் நெருப்பு போடக்கூடாது.
* __[19:8](rc://ta/tn/help/obs/19/08)__ பின்னர் __பாகாலின்__ தீர்க்கதரிசிகள் __பாகாலிடம் __ வேண்டினார்கள், " _பாகாலே எங்களுக்கு உத்தரவு அருளும்__!"
* __[19:12](rc://ta/tn/help/obs/19/12)__ எனவே மக்கள் __பாகாலின்__ தீர்க்கதரிசிகளை பிடித்தார்கள். அப்பொழுது எலியா அவர்களைஅங்கிருந்து கொண்டுபோய், அவர்களைக் கொன்றுபோட்டான்.
## சொல் தரவு:
* Strong's: H1120, G896